Photobucket HOLY! HOLY! HOLY IS THE LORD OF HOST Photobucket

Sunday, May 15, 2011

2011 மே மாத வாக்குத்தத்தம்
இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து இந்த மே மாதத்திலே நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்

"கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார். ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்."  ஏரேமியா 20:11

அன்பானவர்களே, மிகவும் சோர்ந்து, எனக்கு யாருமே இல்லையே, நான் ஒரு அனாதையாய், எந்த ஒரு அன்பும் இல்லாமல், நம்பினவர்களால் தற்போது  துன்பப்படுத்தப்பட்ட நிலைமையில் இருக்கிறீர்களா??
தாயின் கருவறையில் இருக்கும் போதே  உங்களை தெரிந்துக் கொண்ட தேவன், ஒரு போதும், எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை கைவிடவே மாட்டார்.  நாம் யாரும் அவரைத் தேடிப் போகவில்லை. ஜீவனுள்ள தேவனாகிய அவர் தாம் அவருடைய கிருபையினாலும்  இரக்கங்களாலும் பாவிகளாகிய நம்மை தெரிந்துக் கொண்டார். இப்படியிருக்க, உங்களை துன்பப்படுத்துகிறவர்களாலும் உங்களுடைய சோதனைகளாலும் ஏன் கலங்கி, குழம்பிப் போய் இருக்கிறீர்கள்???
வேத வசனம் இவ்வாறாக  கூறுகிறது. "ஆவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுப்பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்" எபிரெயர் 2:18

இப்படியாக உங்களின் கஷ்டங்களிலும் சோதனை நேரத்திலும் கர்த்தராகிய யெகோவா பராக்கிரமசாலியாய் உங்களோடே கூட இருந்து உங்களை விடுவிப்பாராக. சில நேரத்தில் நீங்கள் அதிகமாய் நேசித்தவர்கள் கூட, உங்களுக்கு எதிராகவும் , உங்களை துன்பப்படுத்திக் கொண்டிருக்கலாம்.
உலக அன்பு எல்லாம் மாயை தான். நமக்காக தன் உயிரைக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் அன்புத் தான் உண்மையான அன்பு. ஆகையால் உலக மக்களால் வருகின்ற பிரச்சனைக்களுக்கு சோர்ந்து போகாமல், பவுல் கொரிந்தியருக்கு எழுதிய புத்தகத்தில் கூறுவது போல
              " திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1 கொரிந்தியர் 10:13)
என்ற நம்பிக்கையில் உறுதியாய் இருங்கள்.

ொதுவாக நாம் நெருக்கத்திலும், சோதனை நேரத்திலும் தான் அதிகமான ஆவிக்குரிய அறிவுரைகளையும் பெலத்தையும் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் நிறைய பாடங்களையும் கற்றுக் கொள்ள முடியும்.
அன்பானவர்களே, இதுவரைக்கும் இவ்விதமாக கலங்கி சோர்ந்துபோய் இருக்கும் உங்களுக்கு கர்த்தர் இந்த மாதத்தில் கொடுக்கிற வாக்குத்தத்தின் படி அவர் (கர்த்தர்) பயங்கரமான பராக்கிரமசாலியாய் உங்களோடு இருப்பார். உங்களை துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் உபாகமம் 28:7 வசனத்தின் படி, " உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறியடிக்கப்படும்படி ஒப்புக் கொடுப்பார். ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள். ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்."
ோர்ந்துபோகாதிருங்கள்.. கர்த்தர் உங்களை அக்கினி மதிலாக வேலியிட்டு காத்து, சத்துருவின் கைகளிலிருந்து விலக்கி உங்கள் ஒவ்வொருவரையும் இரத்தக் கோட்டைக்குள்ளே மறைத்து காத்துக் கொள்வாராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே இந்த வாக்குத்தத்ததின்படியே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


No comments:

Post a Comment