Photobucket HOLY! HOLY! HOLY IS THE LORD OF HOST Photobucket

Monday, January 31, 2011

2011 பிப்ரவரி மாத வாக்குத்தத்தம்

                     கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர் இந்த மாதம் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்,

, கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு செய்யப் போகும் அதிசயமான காரியத்தினால் உங்களை சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவேன் என்று வாக்குப் பண்ணுகிறார் 

"நீ சத்தமிட்டு கெம்பீரி; இஸ்ரவேலரின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்." ஏசாயா 12:6

                    அன்பானவர்களே,கர்த்தர் இந்த மாதம் உங்களுக்கு செய்யப் போகும் அதிசயமான காரியத்தினால் உங்களை சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவேன் என்று வாக்குப் பண்ணுகிறார்.


                      இஸ்ரவேலரின் பரிசுத்தர் உங்கள் நடுவில் பெரியவராய்  இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் கெம்பீரிப்பீர்கள். சில காரியங்களில் ஒரு முடிவு வராமல் நீங்கள் சோர்ந்து போய், என்ன செய்ய முடியும் என்ற சூழ்நிலையில் நீங்கள் கலங்கித் தவிக்கிறீர்களோ??

                      கவலைப்படாதிருங்கள்! அவர் (கர்த்தர்) உங்கள் நடுவில் பெரியவராய்  இருப்பதினால் அவர் செய்யப் போகும் நன்மையினால் நீங்கள் சத்தமிட்டு  கெம்பீரிப்பீர்கள். ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்திலே 12-வது அதிகாரம் முழுவதுமாய் வாசித்துப் பாருங்கள்.
                        நீங்கள் அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி அவருடைய மகத்துவமான கிரியைகளை பிரஸ்தாபம் பண்ணும் பட்சத்தில் கர்த்தர் தாமே நிச்சயமாய் உங்களை  அவருடைய அதிசயமான  கிரியையினால் சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவார்.
 "நீங்கள் அவரைத் துதியுங்கள்; அவர் உங்களைத் தேற்றுவார்." ஏசாயா 12:1

 "நீங்கள் பயப்படாமல் நம்பிக்கையாயிருங்கள். அவர் (கர்த்தர்)  உங்களை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்ளப் பண்ணுவார்." ஏசாயா 12:2,3
                       
                            நீங்கள் அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி அவருடைய மகத்துவமான கிரியைகளை பிரஸ்தாபம் பண்ணும் பட்சத்தில் கர்த்தர் தாமே நிச்சயமாய் உங்களை  அவருடைய அதிசயமான  கிரியையினால் சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவார்.

                   கர்த்தர் வாக்கு மாறாதவர். அவர் தாம் சொன்னதை செய்யாதிருக்கிற தேவன் அல்ல. கர்த்தராகிய கிறிஸ்து தாமே உங்கள் யாவரையும், சத்தமிட்டு கெம்பீரிக்கப் பண்ணுவாராக.   ஆமென்.
                                     

No comments:

Post a Comment